ஈரோடு,டிச.30: கோபி நாகர்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் வடிவேல் (40). கூரியர் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கடந்த 27ம் தேதி அவரது நண்பர் செல்வக்குமார் என்பவருடன் கூரியர் டெலிவரி செய்ய சென்றார். பின்னர் கோபி செம்மாண்டம் பாளையத்தில் ஓடும் கீழ்பவானி வாய்க்காலில் குளித்துள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக வடிவேல் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். இந்நிலையில், நேற்று முன்தினம் வடிவேலின் உடல் கலிங்கியம் பகுதியில் வாய்க்காலில் மிதந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடலை மீட்டு கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோபி போலீசில் வடிவேலின் மனைவி தமிழ்செல்வி நேற்று அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.