×

முதியவர் தற்கொலை

தா.பழூர், டிச. 30: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அங்கராயநல்லூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (70). இவர் கடந்த சில நாட்களாக அதிகமாக மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது எலிபேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கலியமூர்த்தி இறந்தார். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் கலியமூர்த்தி சகோதரர் சாமிநாதன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை