×

கிட்டாம்பாளையம் ஊராட்சியை குறைகள் இல்லாத ஊராக மாற்றுவேன்

சோமனூர், டிச.29: சோமனூர் அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஎம்சி.சந்திரசேகர் நேற்று ஆட்டோரிக்ஷா சின்னத்திற்கு வாக்கு கேட்டு அனைத்து வார்டுகளிலும் வாகன பேரணி நடத்தினார்.அப்போது அவர் பேசுகையில், வெற்றி பெற்றவுடன் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் பிரச்னை, சாலைகள் அமைக்க, தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முனைப்புடன் செய்து தருவேன். வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடும், இலவச வீட்டு மனைபட்டா தரவும் உரிய ஏற்பாடுகளை செய்வேன்,’’ என்றார். இந்த பேரணியில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வி.எம்.சி.மனோகரன் கலந்து கொண்டார்  கிட்டாம்பாளையம், வடுகபாளையம், குளத்துபாளையம், வினோபாநகர், உள்ளிட்ட 9 வார்டுகளிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்பி.முருகேசன், துரைமணி, பாலு, அப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : town ,Kitambalayam ,
× RELATED ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய நீலநிற டவுன் பேருந்துகள் இயக்கம்