சத்தியமங்கலம், டிச. 29: சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சத்தியமங்கலம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நாளை நடக்கிறது. நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. வேட்பாளர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.