×

கடையம் அருகே அனுமதியின்றி பார் நடத்தியவர் உள்பட 2பேர் கைது

கடையம், டிச.29:  கடையம் அருகே வெய்க்காலிபட்டியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதன் முன்பு அனுமதியின்றி பார் வைத்து மது விற்பனை செய்து வருவதாக கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடையம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு அனுமதியின்றி மது விற்பனை செய்து வருவது தெரியவந்தது. விசாரணையில் வெய்க்காலிபட்டி ராமசாமி கோயில் தெருவை சேர்ந்த சவுந்திரபாண்டியன் மகன் இசக்கிராஜ்(42), அதே பகுதியைச் சேர்ந்த பிச்சையாண்டி மகன் தர்மராஜ்(42) ஆகியோர் என தெரியவந்தது. இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தார். அவர்களிடமிருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யபட்டது.

Tags : persons ,shop ,barber ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...