×

பாவை பொறியியல் கல்லூரி பேராசிரியருக்கு தேசிய விருது

ராசிபுரம், டிச.27: ஆந்திரா, தெலங்கானா தகவல் தொழில்நுட்ப சங்கம் சார்பில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி பேராசிரியர் வெங்கடேசன், சிறந்த ஆசிரியருக்கான ‘ஆதர்ஷ்  ஆச்சார்ய புரஷ்கர்’ என்ற தேசிய விருதினை வழங்கியது. இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேர்களில், இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாவை பொறியியல் கல்லூரி பேராசிரியர், இன்டென்ஷிப் பயிற்சியில் மாணவர்களை வழி நடத்தியது, தொழில்நுட்ப சங்கங்களின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு மாணவர்கள் சாதனை படைக்க ஊக்குவித்தது, பல ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தது, துறை சார்ந்த விருதுகள் பல பெற்றது, மாணவ கருத்துக்கணிப்புகளில் சிறந்த, தரமான, கருத்துகளை பெற்றது, போன்ற பல காரணங்களுக்காக இவ்விருதினை பெற்றார். தேசிய விருது பெற்ற பேராசிரியரை, பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன், இயக்குநர் நிர்வாகம் ராமசாமி, இயக்குநர் சேர்க்கை செந்தில் மற்றும் பாவை பொறியியல் கல்லூரியின் முதல்வர் பிரேம்குமார் ஆகியோர் பாராட்டினர்.

Tags : Powai Engineering College ,
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி