×

கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கிலாம்பாடியில் வாகன சோதனையின்போது 2.33 லட்சம் பறிமுதல்

கீழ்பென்னாத்தூர், டிச.27: கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கிலாம்பாடியில் நடந்த வாகன சோதனையில் ₹2.33 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கிலாம்பாடி கிராமத்தில் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் கவுரி தலைமையில் நேற்று காலை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கரிக்கிலாம்பாடி கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக பணம் விநியோகம் செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அந்த கிராமத்திற்கு பறக்கும் படையினர் விரைந்து சென்றனர். அப்போது, பஸ் நிலையம் அருகே காருடன் சந்தேகப்படும்படியாக சிலர் நின்றிருந்தனர். அங்கு சென்ற அதிகாரிகள் காரில் சோதனை செய்தபோது ₹2 லட்சத்து 33 ஆயிரம் மற்றும் வாக்காளர் பட்டியல் இருந்தது தெரியவந்தது. இதனை தாசில்தார் கவுரி தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் மகாதேவனிடம் ஒப்படைத்தனர். அப்போது, பிடிஓ பழனி உடனிருந்தார்.

Tags : vehicle inspection ,Karikkilambadi ,Kizhenpennur ,
× RELATED ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை...