×

பொங்கலை பண்டிகைைய முன்னிட்டு சத்தியில் கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனை விறுவிறுப்பு

சத்தியமங்கலம், டிச.25: பொங்கல் பண்டிகை நெருங்குவதால் சத்தியமங்கலம் வாரச்சந்தையில் கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்வதோடு சுவர்களுக்கு வெள்ளை அடிப்பது வழக்கம். வெள்ளை அடிப்பதற்காக ஒயிட் சிமெண்ட், கிளிஞ்சல் சுண்ணாம்பு, கல் சுண்ணாம்பு பயன்படுத்துவது வழக்கம்.இதில், கல் சுண்ணாம்பை விட கிளிஞ்சல் சுண்ணாம்பு வெண்மை நிறத்தில் உள்ளதால் கிளிஞ்சல் சுண்ணாம்பை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். பண்டிகைக்கு 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது சத்தியமங்கலம் வாரச்சந்தையில் கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனை நடந்து வருகிறது.

இதுகுறித்து அந்தியூரை சேர்ந்த சுண்ணாம்பு வியாபாரி கமலா கூறியதாவது:கேரள மாநிலம் கொச்சின் பகுதியில் இருந்து சுண்ணாம்பு வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் சத்தியமங்கலம், அந்தியூர், கோபி, அத்தாணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வாரச்சந்தைகளில் கிளிஞ்சல் சுண்ணாம்பு கிலோ ரூ.30க்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு இதே விலைக்கு விற்ற நிலையில் இந்தாண்டு விலை உயரவில்லை. இந்தாண்டு நல்ல மழை பெய்துள்ளதால் சுண்ணாம்பு வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஒரு நாளைக்கு 4 டன் சுண்ணாம்பு விற்பனையாகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு சுண்ணாம்பு விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Tags : festivities ,
× RELATED அரண்மனை 4ல் தமன்னா, ராசி கன்னா