×

நிலக்கோட்டை அருகே வீணான குடிநீரை கண்டு வேதனை

வத்தலக்குண்டு, டிச. 24: நிலக்கோட்டை அருகே கோவில்பட்டியில் வைகை கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் பழுதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது. இதனை கண்டு மக்கள் வேதனையடைந்தனர். நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகை ஆற்றிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் சிறுநாயக்கன்பட்டி, பிள்ளையார்நத்தம், எத்திலோடு வழியாக மாலையகவுண்டன்பட்டி, பள்ளபட்டி, கொடைரோடு, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி என 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. நிலக்கோட்டை அருகே கோவில்பட்டி பகுதி சாலை ஓரத்தில் வைகை கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது.

Tags : Nilakottai ,
× RELATED நிலமோசடி வழக்கில் சார்பதிவாளர் கைது