விருதுநகர், டிச.22: விருதுநகர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளராக சுற்றுலாத்துறை மற்றும் மேலாண்மைத்துறை இயக்குநர் அமுதவல்லி நியமனம் செய்யப்பட்டு தேர்தல் அலுவலர்களுடன் கூட்டம் டிச.17ல் நடைபெற்றது.
இந்நிலையில் தேர்தல் பார்வையாளர் அமுதவல்லி திடீரென மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் செயலளர் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய தேர்தல் பார்வையாளர் சீனிவாசன் நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளை நேரில் ஆய்வு செய்தார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான குறைகள், புகார்கள் மற்றும் ஆலோசனைகளை தேர்தல் பார்வையாளர் சீனிவாசனுக்கு 97915 32048 எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.