×

பேட்டையில் பித்தளை பாத்திரம் கொள்ளையில் வாலிபர் கைது

நெல்லை, டிச. 22: நெல்லை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜலாலுதீன்(55). இவர் அப்பகுதியில் பித்தளை பாத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இரவில் இவர் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
மறுநாள் காலை பட்டறைக்கு வந்தபோது திறந்திருந்தது. அங்கிருந்த 325 கிலோ பித்தளை பாத்திரங்கள் மற்றும் பித்தளை தகடுகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஜலாலுதீன் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று டவுன் காட்சி மண்டபம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து  விசாரித்தனர்.
இதில் அவர் பேட்டை சாஸ்திரிநகரைச் சேர்ந்த பாபநாசம் மகன் பூநாதன்(22) என்பதும், ஜலாலுதீன் பட்டறையில் பித்தளை பாத்திரங்கள், தகடுகளை திருடியதும் தெரிய வந்தது.
போலீசார் அவரை கைது செய்து பாளை மத்தியசிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள 325 கிலோ பித்தளை பாத்திரங்கள், ஒரு பைக், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : brass character robbery ,
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது