×

பாலக்கரையில் பரபரப்பு முசிறி காவிரியாற்றில் மணல் கடத்திய லோடு ஆட்டோ பறிமுதல்

முசிறி, டிச.19: முசிறி காவிரியாற்றில் மணல் கடத்திய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.முசிறி காவிரி ஆற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி நெடுஞ்சாலை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான ரோந்து போலீசார் முசிறி அருகே உள்ள தண்டலைபுத்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்த லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது லோடு ஆட்டோவில் காவிரி ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக மணல் கொண்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட அரியனாம்பேட்டை விவேகானந்தன்(42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Sasi ,Palakkarai ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்