×

தீவிரவாதிகள் ஊடுருவலா? ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

ஈரோடு, டிச. 19:  தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளார்களா? என ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 4 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து அனைத்து மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். அதன்படி, ஈரோடு ரயில் நிலைய மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களிலும் நேற்று ரயில்வே போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
 
பயணிகளின் உடமைகளையும் போலீசார் சோதனை செய்தனர். ஓடும் ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், ரயில்வே போலீசாரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சந்தேகத்திற்கு இடமான நபர்கள் பயணித்தால், அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய பின் விடுவிக்கின்றனர்.  இதனால், ஈரோடு ரயில் நிலையம் பரப்பாக காணப்படுகிறது.

Tags : extremists ,checking ,train station ,
× RELATED பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம்...