×

உணவில் பல்லி 3 பேருக்கு வாந்தி, மயக்கம்

நெல்லிக்குப்பம், டிச. 18:  நெல்லிக்குப்பம் அருகே வெள்ளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (50). இவரது மனைவி ஜோதி (45), தாயார் உமையாள் (60).நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 3 பேரும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். இவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து, 3 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதை தொடர்ந்து இவர்கள் உணவை ஆய்வு செய்தபோது, சாப்பாட்டில் பல்லி இறந்து கிடந்தது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : fainting ,
× RELATED நாங்குநேரி பிரசாரத்தில் ஈடுபட்ட...