×

மணல் அள்ளிய 2 மாட்டுவண்டிகள் பறிமுதல்

விருத்தாசலம், டிச. 18: விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண்ணாடம் மெயின் ரோடு தில்லை நகர் அருகே விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டு வந்த 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களான ரங்கநாதன் மகன் கிருஷ்ணசாமி(30), சாவடிக்குப்பத்தை சேர்ந்த பவுன்ராசு (64) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு அபராத தொகை விதிக்க விருத்தாசலம் சப்-கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பரங்கிப்பேட்டை அருகே பயங்கரம் இடப்பிரச்னையில் முதியவர் அடித்து கொலை