ஜெயங்கொண்டம், டிச. 17: ஜெயங்கொண்டத்தில் திருவள்ளுவர் ஞானமன்ற இலக்கிய அணி சார்பில் கருத்தரங்கம் நடந்தது. இலக்கிய அணி தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் ராவணன், செல்வதுரை முன்னிலை வகித்தனர். கருத்தரங்கத்தில் மார்ட்டின், சுந்தரேசன், பனசை அரங்கன், புகழேந்தி ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை திருவள்ளூர் ஞான மன்ற தலைவர் பன்னீர்செல்வம் செய்திருந்தார். முன்னதாக ராமலிங்கம் வரவேற்றார். சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.