×

மொடக்குறிச்சியில் பரபரப்பு வேடிக்கை பார்க்க வந்தவர் மனைவி திடீர் வேட்பாளர்

மொடக்குறிச்சி, டிச. 17:   மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வேட்பு மனு தாக்கலை வேடிக்கை பார்க்க வந்தவர் வேட்பாளராக அதிரடியாக மனு தாக்கல் செய்து அசத்தினார். மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் தேவராஜ் (35). இவர் பழமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் மனு தாக்கல் செய்ய போவதாக தேவராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அழைத்திருந்தார். தேவராஜூம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்திருந்தவர்கள் மனு தாக்கல் செய்வதில் பரபரப்பாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அவருடன் வந்திருந்த அவரது நண்பர்கள் சிலர் பழமங்கலம் ஊராட்சியில் நீங்கள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு இருந்தால் எளிதில் வெற்றி பெறலாம் என கூறி அவரை உசுப்பேற்றினர்.

இதனால் மனம் மாறிய தேவராஜ் மதியம் பழமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பொது பிரிவில் பெண்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்ததால், அவரது மனைவி ரேவதியை தேர்தலில் நிற்க வைக்க முடிவு செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் ஆதரவு தெரிவித்தனர். உடனடியாக மனு தாக்கல்் செய்ய ஆவணங்களை சேகரித்தார். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ரேவதியை, உடனடியாக மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பரபரப்பான நிலையில் இறுதி கட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய 10 நிமிடங்கள் இருக்கையில் ஆவணங்களுடன் வேட்பாளர் ரேவதி தேவராஜின் வேட்புமனு கோவில்பாளையம் குலவிளக்கு, பழமங்கலம், மின்னப்பாளையம் பகுதி பொதுமக்கள் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்டது.

Tags : candidate ,Modakurichi ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்