தேவகோட்டை, டிச. 12: தேவகோட்டை கருதாவூரணி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடந்த கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேவகோட்டை கருதாவூரணியில் தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி அன்று காலையில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் செய்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மகா தீபமும், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தன