×

பனைகுளம் கிராமத்தில் அதிகாரிகள் விசாரணை

தர்மபுரி, டிச.11:தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவில் உள்ள பனைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ₹24.5 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக பரவிய தகவலையடுத்து, பென்னாகரம் தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், பனைகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ேநற்று மாலை ெசன்றனர். அங்கு ஊரின் முக்கிய பிரமுகர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, தங்கள் ஊர் வழக்கப்படி சாதாரண பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது என்று கூறிய ஊர் பிரமுகர்கள், ஊராட்சி தலைவர் பதவிக்கான ஏலம் எதுவும் நடக்கவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து, பதவிக்கான ஏலம் நடந்தால், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விட்டு அதிகாரிகள் சென்றனர்.

Tags : Panaikulam ,village ,
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...