×

அரூர் பேருந்து நிலையத்தில் உயர் மின்கோபுர விளக்கை சீரமைக்க வலியுறுத்தல்

அரூர், டிச.11: அரூர் பேருந்து நிலையத்தில் பழுதடைந்த நிலையில் இருக்கும் உயர்மின் கோபுர விளக்கை சீரமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். அரூர் பேருந்து நிலையத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அரூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள், இரவு நேரங்களில் தங்களது கிராமங்களுக்கு செல்ல அரூர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து இங்கிருந்து பஸ்கள் பிடித்து சென்று வருகின்றனர். எனவே, பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, அரூர் பஸ் ஸ்டாண்டில், உயர் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மின் விளக்குகள் கடந்த 2 வாரமாக எரியாமல் உள்ளது. இதனால், இரவு ேநரங்களில் பஸ் ஸ்டாண்ட் கும்மிருட்டாக உள்ளது. இதனால், குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதால், பெண்கள் பஸ் ஸ்டாண்டில் நிற்பதற்கே அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பழுதடைந்த உயர் மின்கோபுர விளக்ைக சீரமைக்க ேவண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : bus station ,Aurora ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்