×

சேந்தமங்கலம் அருகே சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

சேந்தமங்கலம், டிச.10: சேந்தமங்கலம் அருகே, பச்சுடையாம்பட்டி புதூரில் மூடிக்கிடக்கும் நவீன சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டிபுதூரில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் நடத்தப்படும் தறிப்பட்டறைகளில், பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணிபுரிகின்றனர். இப்பகுதியில், மாவட்ட ஊராட்சி மாநில நிதிக்குழு மானியத்தில், நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதில், குளியலறை, கழிப்பிடம், துணி துவைக்கும் மேடை என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக சுகாதார வளாகம் போதிய பராமரிப்பின்றி, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்த சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதி இல்லை. கதவுகள் உடைந்த நிலையில் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தில், மோட்டார் பழுதடைந்து பல வருடங்களாகி விட்டது. அதனை சரி செய்யாததால், தண்ணீர் சப்ளை செய்யப்படாமல் காய்ந்து போய் காணப்படுகிறது. இதுகுறித்து, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Senthamangalam ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை