×

போடூர் பகுதியில் தேசிய மாணவர் படையினர் தூய்மை பணி

பென்னாகரம், டிச.10: பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் பென்னாகரம் பேரூராட்சி பணியாளர்கள் ஒன்றிணைந்து போடூர் பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். தூய்மைப் பணியை பேரூராட்சி செயல் அலுவலர் கீதா தொடங்கி வைத்தார்.   இதில், மாணவர்கள் வீடு, வீடாக சென்று பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்தனர். மேலும், போடூர் பகுதியில் சாலையோரத்தில் உள்ள புதர்களை அகற்றினர். பொதுமக்களிடம், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறினர். மேலும், மக்கும் குப்பை- மக்காத குப்பை என தரம் பிரிப்பது தொடர்பாக விழிப்புணர்வவு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பென்னாகரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், தேசிய மாணவர் படை அலுவலர் பைரோஸ் பாஷா உள்ளிட்ட ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Podur Area ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா