உடுமலை,டிச.3: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) பணிக்கான ஆட்கள் தேர்வு நடக்கிறது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கனமழையின் காரணமாக இந்த தேர்வு தள்ளி வைக்கப்படுவதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு tangedco.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.