×

காங்கயத்தில் சிறுமி கடத்தல் வடமாநில வாலிபர் மீது வழக்குப்பதிவு


காங்கயம்,டிச.3: காங்கயம்  அடுத்துள்ள ஓலப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையால் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 16 வயதுள்ள சிறுமி வேலைபார்த்து வந்துள்ளார்.அப்போது அங்கு உடன் வேலை பார்த்த வடநாட்டு வாலிபர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு  அந்த வாலிபர் வேலையை விட்டு நிறுத்தப்பட்டார். இந்நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி அந்த பெண்ணின் தாயார் ஊரிலிருந்து நூற்பாலைக்கு சென்று பெண்ணை அழைத்து கொண்டு ஊருக்கு போனார். போகும் வழியில் வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் பெண்ணின் தாயார் கழிவறைக்கு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது, வெளியில் நின்று கொண்டிருந்த மகளை  காணவில்லை  இதுபற்றி அந்த பெண்ணின் தந்தை ராஜகோபால் காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தன்னுடைய மகளை  வடநாட்டு வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார். இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Northern Province ,
× RELATED நாகை-காங்கேசன்துறை படகு சேவை மீண்டும் தொடங்கப்படும்