×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சியினருடன் தி.மு.க. பேச்சுவார்த்தை

ஈரோடு, டிச. 3:   ஈரோடு பெரியார் நகரில் உள்ள தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி வீட்டில் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளுடன் உள்ளாட்சி தேர்தல் சீட்டு பங்கீடு மற்றும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று மாலை நடந்தது. இதில், தி.மு.க. சார்பில், தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, அவைத்தலைவர் குமார் முருகேஷ், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதல் பேச்சுவார்த்தையில் கொ.ம.தே.க. சார்பில், மாநில பொருளாளர் பாலு, இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று அவர்களுக்கு சாதகமான வார்டு, பஞ்சாயத்துக்கள் குறித்து விளக்கினர். அதைத்தொடர்ந்து, மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களுக்கு சாதகமான வார்டு, பஞ்சாயத்துக்கள் குறித்து விளக்கினர்.  இதையடுத்து தி.மு.க, கொ.ம.தே.க, காங்கிரஸ் கட்சியினர் சீட்டு எண்ணிக்கை, தேவையான இடங்கள், தங்களுக்கு சாதகமான பஞ்சாயத்து, யூனியன் வார்டு, மாவட்ட பஞ்சாயத்து வார்டு விவரங்களை பட்டியலிட்டனர். இந்த பட்டியலை, தி.மு.க. தலைமைக்கு அனுப்பி வைத்து, ஒப்புதலுக்குப்பின் யார்? யாருக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்படும் என்று மாவட்ட செயலாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Tags : alliance ,DMK ,coalition partners ,government ,
× RELATED கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது