×

தொடர் போராட்டத்தில் பங்கேற்க காரைக்கால் வவுச்சர் ஊழியர்கள் புதுவை புறப்பட்டனர்

காரைக்கால், நவ. 29: பொதுப்பணித்துறையில் 1,311 வவுச்சர் ஊழியர்களுக்கு வழங்கப்படும் 16 நாட்கள் வேலையை 30 நாட்களாக உயர்த்திட வேண்டும். மத்திய அரசின் சட்டக்கூலி நாள்   ஒன்றுக்கு ரூ.648 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். சீனியாரிட்டி  வரையறை செய்து முழுநேர தினக்கூலி ஊழியர்களாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பினர்  காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே  பழைய ரயிலடி பகுதியில்  கடந்த 2 நாட்களாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெறும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க காரைக்காலில் இருந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.  தலைவர் யூசுப்கான் தலைமையில் செயலாளர் பிரபு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சென்றனர்.

Tags : Karaikal ,voucher staff ,struggle ,New Delhi ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...