×

திருமணமான 2 மாதத்தில் வடமாநில பெண் மாயம்

ஈரோடு, நவ.29:ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மெகாபகத்சிங் மகன் சர்வன்சிங் (23). இவர், ஈரோடு பெரியார் வீதியில் தங்கி, ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பின்கிதனவர் (19) என்பவருடன் திருமணமானது. இதைத்தொடர்ந்து சர்வன்சிங்கும், பின்கிதனவரும் ஈரோட்டில் வசித்து வந்தனர்.இந்நிலையில், பின்கிதனவர் கடந்த 22ம் தேதி, சர்வன்சிங்கிடம் சொந்த ஊருக்கு போகலாம் என கூறினார்.  இதற்கு சர்வன்சிங் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து, சில நாட்கள் கழித்து போகலாம் என கூறிவிட்டு, வேலைக்கு சென்று விட்டார். பின்னர், சர்வன்சிங் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மேலும், ராஜஸ்தானுக்கும் போகவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சர்வன்சிங் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், மாயமான பின்கிதனவரை தேடி வருகின்றனர்.

Tags : Northland ,girl magic ,
× RELATED நகை மோசடி வடமாநில கும்பல் சிக்கியது