புதுச்சேரி, நவ. 28: புதுவை அரசு பொதுப்பணித்துறையில் 10 வருடங்களாக பணியாற்றி வரும் வவுச்சர் ஊழியர்கள் தங்களை தினக்கூலியாக மாற்றக்கோரி 25ம்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் நாளில் சுதேசி மில் எதிரே தர்ணாவில் ஈடுபட்ட ஊழியர்கள் நேற்று பொதுப் பணித்துறை தலைமை அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இந்நிலையில் 3வது நாளாக நேற்று மீண்டும் சுதேசி மில் எதிரே சங்க தலைவர் சரவணன் தலைமையில் பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசும், அதிகாரிகளும் தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை தீர்க்கும் காணும் வரை போராட்டத்தை தொடர நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.