×

கடத்தூர் அருகே ஆட்டு கொட்டகைக்கு தீ வைத்தவருக்கு வலை

கடத்தூர், நவ.27:கடத்தூர் அருகே ஆட்டு ெகாட்டகைக்கு தீவைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த நடராஜ் மகன் மலையன்(39). இவர் வீட்டின் அருகே கொட்டகை  அமைத்து 15ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டு தூங்க சென்றார். அப்போது மர்ம நபர்கள் கொட்டகைக்கு தீ வைத்து விட்டனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் ஆடுகள் உயிருடன் தப்பியது. இதுகுறித்து மலையன் கொடுத்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : fire ,Kadathur ,
× RELATED தீ தடுப்பு தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம்