×

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைனான்சியர் பலி

தேன்கனிக்கோட்டை, நவ.27: தேன்கனிக்கோட்டை அடுத்த கோகுல்தெரு பகுதியை சேர்ந்தவர் சிட்டி(எ)கிருஷ்ணமூர்த்தி(42). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தொழில் விஷயமாக அத்தேவனப்பள்ளிக்கு சென்றிருந்தார். தொடர்ந்து, இரவு வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும், அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையே நேற்று காலை அந்தேவனப்பள்ளி அடுத்த சாலையோரம் கூட்ரோடு பகுதியில் சாலையோர பள்ளத்தில் ஆணின் சடலம் கிடந்தது.

இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், சடலமாக கிடந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்பதும், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accountant ,
× RELATED நெடுஞ்சாலைத்துறையில் மண்டல கணக்காளர்...