×

பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டி யாகம்

அரியலூர், நவ. 27: பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டி யாகபூஜை நேற்று நடந்தது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி கோயில் சன்னதியில் உள்ள மகா பிரத்தியங்காரதேவிக்கு மாதம்தோறும் அமாவாசை தினத்தன்று மிளகாய் சண்டியாக பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடந்த மிளகாய் சண்டியாகத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்று நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது பக்தர்கள் கொண்டு வந்த மிளகாயை யாகத்தில் கொட்டினர். பின்னர் சேலை நேர்த்திக்கடன் செய்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Chilli Sandy Yagam ,Poyadhanallur Chamundeswari Temple ,
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...