×

போக்குவரத்து போலீசாருக்கு உதவிய டிராபிக் வார்டன் குழுவுக்கு பாராட்டு

ஓசூர், நவ.26:  ஓசூரில் போக்குவரத்து போலீசாருக்கு உதவிய டிராபிக் வார்டன் குழுவுக்கு, கிருஷ்ணகிரி எஸ்பி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
 ஓசூர் நகரில் போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக டிராபிக் வார்டன் குழு அமைக்கப்பட்டு, அதில் 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 10 வருடங்களாக சிறப்பாக பணியாற்றிய டிராபிக் வார்டன் குழுவை ஊக்கப்படுத்தும் வகையில், பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தொழிற்சாலைகளின் மேலாளர்கள் கலந்து கொண்டு, டிராபிக் வார்டன் குழுவை வாழ்த்தி பேசினர். டிராபிக் வார்டன்கள் போக்குவரத்து நெரிசல், திருவிழா நடக்கும் கோயில்கள், கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விழாக்களில் கலந்து கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஓசூர் போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு பணியில் ஈடுபட்ட குழுக்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பாராட்டும் வகையில், அவர்களுக்கு கேடயம், சான்றிதழை கிருஷ்ணகிரி எஸ்பி பண்டிகங்காதர் கலந்து கொண்டு வழங்கினார். இதில், ஓசூர் டிஎஸ்பி மீனாட்சி, சிப்காட், அட்கோ இன்ஸ்பெக்டர்கள், டிராபிக் போலீசார், டவுன் போலீசார், டிராபிக் வார்டன் குழு தலைவர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Traffic Warden Group ,
× RELATED மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு