சூளகிரி, நவ.26:சூளகிரி தாலுகா, பண்ணப்பள்ளி ஊராட்சி லட்சுமிபுரம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதி மக்களின் தேவைக்காக சில ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில், இந்த தொட்டி சிதிலமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளதால், தொட்டியில் நீர் ஏற்றிய சில மணி நேரத்திற்குள் குடிநீர் கசிந்து வெளியேறி விடுகிறது. மேலும், விரிசலடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு, பழுதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு, புதிய தொட்டி கட்டித்தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.