×

டயர்களை எரித்ததால் பொதுமக்கள் அவதி

கடத்தூர், ஏப்.30: கடத்தூர் அருகே உள்ள புட்டிரெட்டிப்பட்டியில், ரயில்வே கேட் உள்ளது. சேலம் – சென்னை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும், புட்டிரெட்டிப்பட்டி வழியாக செல்கிறது. இந்த ரயில் கேட் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபம் பின்புறம், நேற்று கரும்புகை வானுயரத்துக்கு எழுந்தது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மூச்சு திணறல், கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர். அக்கம்பக்கத்தினர் கரும்புகையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது குப்பை கழிவுகளுடன், பழைய டயர்களுக்கும் தீவைத்து எரித்ததால் இந்த கரும்புகை ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

The post டயர்களை எரித்ததால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kaduur ,Putirettipatti ,Salem ,Chennai ,
× RELATED ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்