×

சிவசுப்ரமணியசுவாமி கோயிலில் ஆனந்த நடராஜருக்கு ருத்ராபிஷேக வழிபாடு

தர்மபுரி, நவ.26: குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணியசுவாமி கோயிலில், ஆனந்த நடராஜர் சன்னதியில் ருத்ராபிஷேக வழிபாடு நேற்று நடந்தது.
தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஆனந்த நடராஜர் சன்னதியில், நேற்று ருத்ராபிஷேகம் மற்றும் சிறப்பு யாகம் நடந்தது. இதையொட்டி காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 11 வகையான தீர்த்தங்களால் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து நடந்த சிறப்பு யாகத்தில், சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி சிறப்பு வழிபாடு நடத்தினர். பகல் 12 மணிக்கு ஆனந்த நடராஜருக்கு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. விழாவில் சிவனடியார்களின் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு விபூதி, ருத்ராட்ச பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Rudrabhishekam ,Ananda Nataraja ,Sivasubramaniyaswamy Temple ,
× RELATED கும்பகோணம் அருகே தயாரான ரூ5 கோடியில் 23...