×

விவசாயிகளுக்கு அதிகாரி ஆலோசனை மாங்குடி பகுதியில் சாலைகளை சீரமைக்க கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், நவ.26: திருவாரூர் ஒன்றியம் மாங்குடி ஊராட்சி பகுதியில் சாலைகளை சீரமைக்க கோரியும், ரேஷன் கடைகளில் தட்டுப்பாடில்லாமல் பொருட்களை வழங்க கோரியும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாங்குடி ஊராட்சியில் கடைத்தெரு உட்பட அனைத்து தெருக்களிலும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், அப்பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் தரமான அரிசி மற்றும் பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாங்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின்மாநில குழு உறுப்பினர் மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் புலிகேசி, மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன் ,திமுக ஊராட்சி செயலாளர் குருநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : labor union protests ,area ,Mangudi ,roads ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி