×

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

தர்மபுரி, நவ.22: ஒடிசா தென்கானல் பகுதியை சேர்ந்தவர் அஜூதவுரி (20), எலக்ட்ரீசியன். இவர் தர்மபுரியில் தங்கி பணி செய்து வந்தார். நேற்று முன்தினம், தர்மபுரி- பென்னாகரம் ரோடு குமாரசாமிப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அஜூதவுரி கீழே தவறி விழுந்தார். அப்போது கீழே ஓடிக்கொண்டிருந்த மின்மோட்டார் மீது அவர் விழுந்ததால், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அஜூதவரி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செ்யதனர். தொடர்ந்து விசாரித்ததில் அஜூதவுரி உரிய உபகரணங்கள் இல்லாததால், அவர் பணியின் போது மேலே இருந்து கீழே விழுந்தது தெரிந்தது. இதையடுத்து, கன்ட்ராக்டரான ஒடிசாவை சேர்ந்த கிஷோர் கவுரியை கைது செய்தனர்.

Tags : Electrician Kills Electrician ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா