×

மாட்டு வண்டியில் மணல் கடத்தல்: 2 பேருக்கு வலை

நெல்லிக்குப்பம், நவ.22:நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார், பில்லாலி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த இரண்டு மாட்டு வண்டிகளை நிறுத்துமாறு கூறினர். அப்போது மாட்டுவண்டி ஓட்டுனர்கள் போலீசாரை கண்டதும் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு அமைக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு