×

சிவகாசியில் மாநில அளவிலான செஸ் போட்டி  நாராயணகுரு பள்ளி மாணவன் சாதனை

நாகர்கோவில், நவ.19: நாகர்கோவில் கோட்டார்  நாராயண குரு மேல்நிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு  படிக்கும் மாணவன் விக்னேஷ் பாபு. சமீபத்தில் அகஸ்தீஸ்வரம் தாலுகா அசோசியேசன் நடத்திய மாவட்ட அளவிலான 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஓபன் செஸ் போட்டியில் கலந்து ெகாண்டு முதல் பரிசை பெற்றான். மேலும் சிவகாசி செஸ் கிளப் நடத்திய மாநில அளவிலான போட்டியில் 2ம் பரிசை பெற்றுள்ளான். பல்வேறு பரிசுகளை பெற்ற மாணவன் விக்னேஷ் பாபுவை, பள்ளி தலைவரும், தாளாளருமான நாகராஜன், பள்ளி முதல்வர் அமுதா ஜெயந்த் உள்ளிட்டோர் பாராட்டினர். மேல்நிலை வகுப்புகளின் பொறுப்பாளர் சுயம்புலிங்கம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளும் மாணவர் விக்னேஷ் பாபுவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.




Tags : State ,Level Chess Competition ,
× RELATED புயலுக்கு கேட்ட நிவாரணம்...