×

தர்மபுரி அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு

தர்மபுரி, நவ.12: தர்மபுரி மாவட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, நேற்று நடந்தது. இதில், 12 பேருக்கு இடமாறுதலுக்கான ஆணை உடனடியாக வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, எமிஸ் இணையதளம் மூலமாக, விருப்ப பணியிட மாறுதல் கலந்தாய்வு, முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று நடந்தது. மாவட்டத்தில் 17 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், இடமாறுதலுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர். இதில் 12 பேருக்கு விருப்பப்பட்ட பள்ளிக்கு இடமாறுதல் கிடைத்தது. உடனடியாக அவர்களுக்கு இடமாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. 3 பேர் அதே பள்ளியில் வேலை செய்வதாகவும், 2 பேர் வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல் கேட்டும் சென்றனர். இடமாறுதல் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள் விபரம்:

மாரண்டஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ் செல்வி, இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். அ.மல்லாபுரம் பள்ளியில் இருந்து நாகையா, பொம்மஅள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஏரியூரில் இருந்து மாட்லாம்பட்டி அரசு பள்ளிக்கு முருகேசன், கலப்பம்பாடியில் இருந்து மல்லுப்பட்டி அரசு பள்ளிக்கு மாதேசன், கன்னிப்பட்டியில் இருந்து வெங்கட்டம்பட்டி அரசு பள்ளிக்கு இளங்கோவன், நெருப்பூரில் இருந்து பி.அக்ரகாரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வையாபுரி, ஆர்.கோபிநாதம்பட்டியில் இருந்து கன்னிப்பட்டி அரசு பள்ளிக்கு சிவக்குமார், பி.அக்ரகாரத்தில் இருந்து ஜம்மனஅள்ளிக்கு கோவிந்தராஜ், நத்தமேட்டில் இருந்து கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மதன் ஆகியோர் இடமாறுதல் செய்யப்பட்டனர். அவர்கள் உடனே பொறுப்பேற்றுக்கொண்டனர். நேற்று மாலை முதுநிலை ஆசிரியர் மற்றும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது.

Tags : Government Schools ,Headmasters ,Dharmapuri ,
× RELATED சென்னையில் இணையவசதியுடன் 200...