×

பெரம்பலூர் பகுதியில் பிரம்பு ஊஞ்சல் விற்பனை ஜோர்

பெரம்பலூர், நவ. 7: பெரம்பலூர் பகுதியில் பிரம்பு ஊஞ்சல் விற்பனை அதிகரித்துள்ளது.வீடுகளில் பிரம்பாலான ஊஞ்சலை நடு உத்திரத்தில் கட்டி சிறியவர் முதல் பெரியவர் வரை அதில் அமர்ந்து ஆடி மகிழ்வர். பிரம்பால் செய்யப்பட்ட இந்த ஊஞ்சல் இருப்பதை கடந்த காலங்களில் பலரும் கவுரமாக கருதி வந்தனர். இதற்காக ஷோரூம்களில் வைத்து விற்கப்பட்ட பிரம்பு ஊஞ்சல்கள் இப்போது மலிவாகி சாலையோரம் பிளாஸ்டிக் சேர் விற்பதுபோல் வரிசை கட்டி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.குறிப்பாக பெரம்பலூர்- துறையூர் சாலையில் மதன கோபாலசுவாமி கோயில் மண்டபத்தின் முன்பு சாலையோரம் வரிசையாக விற்பனைக்கு அணிவகுத்து நிற்கிறது. அசாமில் இருந்து கொண்டு வரப் பட்ட பிரம்பை சென்னையை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் ஊஞ்சலாக பிண்ணி வண்ணம் தீட்டி விற்கின்றனர். இது குறைந்தபட்சம் ரூ.1000 முதல் ரூ.2500 வரை விலை வைத்து விற்கப்படுகிறது. அவற்றை சுற்றுவட்டார பொதுமக்கள் பேரம்பேசி குறைத்து வாங்கி செல்கின்றனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி