×

ஓய்வூதியத்தை கருவூலம் மூலம் வழங்க வலியுறுத்தல்

பவானி, நவ.7:  கோவை போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் சங்கக் கூட்டம், தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நேற்று நடந்தது. கோரிக்கைகளை விளக்கி மத்திய சங்கத்தின் செயலாளர் குருநாதன், நிர்வாகிகள் சந்திரசேகரன், வெள்ளியங்கிரி, சுப்பிரமணியம், விஜயன் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாதந்தோறும் 1ம் தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டும். ஆந்திர அரசைப் போன்று 2003ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.பணியிலிருந்தபோது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, வாரிசுவேலை வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Treasury ,
× RELATED ராசிபுரம் அருகே ரூ.7 கோடி மதிப்பிலான...