அம்பத்தூர்: கொரட்டூர் கோபாலகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் மகேஷ்குமார் (34). இருசக்கர வாகன மெக்கானிக். இவர், கடந்த வாரம் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக மனைவி, குழந்தைகளுடன் பாடிக்குப்பம் சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மகேஷ்குமார் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் கொடுத்தனர். உடனே மகேஷ்குமார் குடும்பத்துடன் விரைந்து வீட்டுக்கு வந்து பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த 11 சவரன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.
* மாங்காடு அடுத்த சிக்கராயர்புரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (38). கட்டிட கான்ட்ராக்டர். இவரது மனைவிக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காக அரவிந்த், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
நேற்று காலை வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
*சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் தேவராஜ் (34). பெயின்டர். கடந்த சனிக்கிழமை இவர், தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு ெசன்றுவிட்டு ேநற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 3 சவரன் தங்க நகைகள் கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.