×

திருப்பரங்குன்றம் அருகே வெல்டிங் கருவிகளுடன் போலீசில் சிக்கிய மூவர் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க வந்தவர்களா?

திருப்பரங்குன்றம், நவ. 5: திருப்பரங்குன்றம் அருகே, வெல்டிங் கருவிகளுடன் சிக்கிய மூவர், ஏடிஎம்மை கொள்ளையடிக்க வந்தவர்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் அருகே பாம்பன் நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திருப்பரங்குன்றம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதி ஏடிஎம் மையம் அருகே, டூவிலர் மற்றும் காரில் வந்த மூன்று பேர் நின்றுள்ளனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்களது காரை போலீசார் சோதனை செய்ததில், அதில் வெல்டிங் கருவிகள் மற்றும் இரும்பு கட்டர் ஆகியவை இருந்தது தெரிய வந்தது. அவர்கள் ஏடிஎமை கொள்ளையடிக்க வந்தவர்களா, அல்லது வேறு கொள்ளையில் தொடர்பு உடையவர்களா என போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். மூன்று பேரும் தேனியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலும் 2 நபர்கள் உட்பட 5 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : policemen ,Thiruparankundram ,ATM ,
× RELATED தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்