×

பழநி ஜிஹெச்சில் லஞ்சம் வாங்குவோர் மீது நடவடிக்கை

பழநி, நவ. 5: பழநி அரசு மருத்துவமனையில் லஞ்சம் வாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் விடுதலை முன்னணி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழநியில் தமிழர் விடுதலை முன்னணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில நிறுவனர் பழனிசிவா தலைமை வகித்தார். மாநில தலைவர் ஜாபர் சாதிக் முன்னிலை வகித்தார். மாநில செய்தி தொடர்பாளர் நாகராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஐய்யப்ப பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் வியாபாரிகள் வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் சாலையோர வியாபாரிகளுக்கு உரிய இடம் ஒதுக்கி தர வேண்டும். காமராசர் நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

பழநி நகரில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சரிசெய்ய வேண்டும். அதிக வட்டி வசூலிக்கும் மோட்டார் வாகனக்கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில துணை செயலாளர் லோகேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் சதுர்தீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் காளிதாஸ், ஒன்றிய செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சாலை விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலி