×

அரூர் அருகே பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி மையம்

அரூர், நவ.1:அரூர் ஒன்றியம் பேதாதம்பட்டி ஊராட்சி, கூக்கடப்பட்டியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடம், சேதமடைந்த நிலையில் இருந்தது. இதனால், அருகில் இருந்த நடுநிலை பள்ளி வளாகத்தில், தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதையடுத்து சேதமடைந்த நிலையில் இருந்த, அங்கன்வாடி மையம் இடித்து அகற்றப்பட்டது.

பின்னர் ஊரக வளர்ச்சி துறை சார்பில், 8.50லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து 6 மாதங்களாகியும், அங்கன்வாடி மையம் பயன்பாடிற்கு வராமல் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே, அங்கன்வாடி மையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Anganwadi Center ,Aroor ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்