×

பாலவிடுதியில் அதிகபட்சம் கரூர் ராயனூர் அகதிகள் முகாம் சுற்றுச்சுவர் சேதம்

கரூர், நவ. 1: கரூர் ராயனூரில் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளது. 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதில் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுற்றுச்சுவரின் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை சரி செய்து சீரமைத்து தர வேண்டும் என இலங்கை தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.ஆங்காங்கே சுவர்கள் ஓட்டை விரிசலுடன் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுச்சுவரை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED கரூர் ஜவஹர் பஜார் பகுதியில்...