×

கோவை மாவட்டத்தில் 2 தலைமை ஆசிரியர்கள் டிஇஓக்களாக பதவி உயர்வு

கோவை, நவ.1: கோவை மாவட்டத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வந்த இருவர் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றனர்.தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 47 பேருக்கு மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த இருவருக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கோவை, செட்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த பழனிச்சாமி, நீலகிரி மாவட்டம், கூடலூர் மாவட்ட கல்வி அலுவலராகவும், செம்மேடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த பாண்டியராஜசேகரன் குன்னூர் மாவட்ட கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் விரைவில் பதவியேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Head Teachers ,Coimbatore District ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்