×

நவ.10 மிலாது நபி அரசு காஜி அறிவிப்பு

திருச்சி, அக்.31: திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி தலைவரும் திருச்சி மாவட்ட அரசு காஜியுமான ஜலீல் சுல்தான் ஆலிம் வெளியிட்டுள்ள அறிக்கை: அக்.29ம் தேதி மாலை சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும், திருச்சியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும், மற்ற மாவட்டங்களிலும் ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை தென்பட்டதால் அக்.30ம் தேதி ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை ஆரம்பம் என்று அறிவிக்கப்படுகிறது. வரும் நவ.10ம் தேதி ஞாயிறுக்கிழமை மிலாதுநபி விழா பண்டிகை உத்தம நபியின் உதயதின விழா எனவும் அறிவிக்கப்படுகிறது. முஸ்லிம் மக்கள் அனைவரும் நபி (ஸல்) காட்டிய சுன்னத்தான வழியை பின்பற்றி நடந்து இறைவனை அதிகமாக தொழுது, நபிலான வணக்கங்களும், தான தர்மங்களில் ஈடுபட்டு, உணவு அபிவிருத்திக்காகவும் ஆயுள் அதிகரிக்கவும் நம் சகோதர சமுதாய மக்களுடன் ஒற்றுமையுடனும் மத நல்லிணக்கத்துடனும் இணைந்து வாழ இறைவனை பிரார்த்தனை செய்ய கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மிலாதுன்நபி வாழ்த்துக்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Prophet Gaddafi ,
× RELATED திருவெறும்பூர் அருகே தீப்பாஞ்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்