×

மதிகோன்பாளையம் ஏரிக்கரையில் தடுப்புச்சுவர்

தர்மபுரி, அக்.31: தர்மபுரி அடுத்த மதிகோன்பாளையம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் மதிகோன்பாளையம் அருகே ரெட்ரி ஏரி உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரி கரை வழியாக திருப்பத்தூர், சென்னை, வேலூர் போன்ற ஊர்களுக்கு தினமும் 100க்கணக்கான அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், கார்கள், லாரிகள் சென்று வருகின்றன. தற்போது பருவமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரியில் தண்ணீர் நிரம்பி வருகிறது.

மதிகோன்பாளையம் முதல் நாய்க்கன்கொட்டாய் வரையில், திருப்பத்தூர் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ஏரிக்கரையின் சாலை அகலப்படுத்தப்படுகிறது. எனவே திருப்பத்தூர் மெயின் ரோட்டில் ஏரிக்கரையின் ஓரத்தில் தடுப்பு சுவர் அமைத்து, கரையை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lake ,
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!